உதகை வட்டாரம் தோட்டக்கலை துறை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் இயங்கி வரும் விரிவாக்க சீரமைப்பு திட்டம்.
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் (அட்மா) திட்டத்தின் கீழ் உதகை வட்டார விவசாயிகளுக்கு காய்கறிகளில் தரம் பிரித்தல், வரிசைப்படுத்துதல், நவீன சேமிப்பு கிடங்குகள் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த உள் மாவட்ட அளவிலான இணைய வழி பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்பயிற்சியில் தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர், சிவசுப்ரமணியம் சாம்ராஜ், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர்கள் ஷிபிலா மேரி மற்றும் குருமணி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் சுரேஷ், வேளாண் அலுவலர் (வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை) கலைவாணி மற்றும் ootymaligai.com நிறுவனர் ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.
இப்பயிற்சியில் மின்னனு வர்த்தகம் மற்றும் காய்கறிகளை நவீன தொழில்நுட்ப முறையில் சேமித்து வைப்பது குறித்து விவசாயிகளுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இப்பயிற்சியில் நாற்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர். இதில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சதீஷ், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் அஸ்வினி மற்றும் ரித்திஸ் ஆகியோர் பங்கேற்றனர்.