தர்மபுரி மாவட்ட கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றம் சார்பாக கவியரசு கண்ணதாசன் 94-வது பிறந்தநாள்விழா கொண்டாடப்பட்டது. மன்றத் தலைவர் தகடூர் வேணுகோபால் தலைமை தாங்கினார் செயலாளர் பாலமுரளி முன்னிலை வகித்தார்.
பொருளாளர் பாலு வரவேற்றார். இதில் அன்னை கஸ்தூரிபாய் சேவா சங்க பொருளாளர் ரமேஷ், கருணாநிதி, சேகர் இனிப்பு வழங்கினர்.
விழாவில் செயலாளர் சுதாகர், சுகுமார், செல்வம் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர் மற்றும் பாரதமாதா மக்கள் சிந்தனை குழு தலைவர் பிரதீப்குமார் பொருளாளர் சந்திரமோகன் மற்றும் பிறைசூடன், மாதேஷ், சங்கர் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். நிறைவாக வினோத் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.