கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பா ளையம் சட்டமன்ற தொகுதி காரமடை பேரூராட்சியில் பஸ் நிலையத்தில் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அவரது திருவுருவ படத்திற்கு நகர திமுக செயலாளர் வெங்கடேசன் தலைமையில் மலர் தூவி திமுகவினர் மரியாதை செலுத்தினர்.
மதியம் பன்னிரெண்டு மணியளவில் மாவட்ட செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார் ஆகியோர் அன்னதானம் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் கல்யாணசுந்தரம், மாவட்ட வர்த்தக அணி புருஷோத்தமன், இளைஞர் அணி அமைப்பாளர் யாசர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல மேட்டுப்பாளையத்தில் நகர செயலாளர் முகமது யூனுஸ் தலைமையில் அவரது வீட்டின் முன்பு வைத்திருந்த கலைஞர் கருணாநிதி திருவுருவ படத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பா.அருண் குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து அங்குள்ள பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. மரக்கன்றுகளும் நடப்பட்டன.