fbpx
Homeபிற செய்திகள்எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில் வேளாண் வளர்ச்சி பணிகள் தொடக்க விழா

எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில் வேளாண் வளர்ச்சி பணிகள் தொடக்க விழா

தமிழக அரசின் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் திட்டம் 2021-22ன் கீழ் ரூ.227 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள் தொட க்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியினை முதல்-வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொ டங்கி வைத்தார்.

இதன் ஒரு பகு தியாக கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில் வேளாண் வளர்ச்சி பணிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கொண்டையம்பாளையத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல் லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார்.

நடராஜன் எம்.பி, எஸ்.எஸ்.குளம் தி.மு.க.ஒன்றிய செயலாளரும், அட் மா தலைவருமான சுரேஷ்குமார் கொண்டையம் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

தோட்டக்கலை துணை இயக்குனர் புவனேஸ்வரி வரவேற்றார்.நிகழ்ச் சியில் தோட்டக்கலைத் துறை, வேளாண்மை துறை, வரு வாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாது காப்பு துறை, பால்வளத்துறை, கால்நடை பராமரிப்பு துறை, ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட துறைகளின் திட்டங்களை ஒருங்கிணைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இதில் 210 பயனாளிகளுக்கு வீட்டுத் தோட்டத்திற்கு தேவையான 8 வகை விதைகள் மற்றும் 2 கிலோ மண்புழு உரம் 75 சதவீத மானியத்திலும், பயிர் ஊக்கத்தொகை 100 சதவீத மானியத்திலும் வழங்கப்பட்டது.

மேலும் ரூ.53 ஆயிரத்து 625 மதிப்பில் பயனாளிகளுக்கு வேளாண் பொருட்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சர்க்கார் சாமக்குளம் பேரூராட்சி தலைவர் கோமளவல்லி கந்தசாமி, சர்க்கார் சாமக்குளம் பேரூராட்சி துணைத்தலைவர் மணி என்ற விஜயகுமார் மற்றும் அரசு அதிகாரிகள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img