முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், எம்.கே.தியாகராஜ பாகவதரின் மகள் வழி பேரன் சாய்ராம் மற்றும் அவரது குடும்பத்தினர் வறிய நிலையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு, அவருக்கு அரசு சார்பில் குறைந்த வாடகையில் சென்னையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு வீடு ஒதுக்கியதற்கான ஆணையும், அவ்வீட்டிற்கான சாவியையும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை நிதியுதவியாகவும் வழங்கினார்.
இந்நிகழ்வின்போது கலை பண்பாட்டுத்துறை ஆணையர் கலையரசி உடனிருந்தார்.