நீலகிரி மாவட்டம் ஊட்டி வட்டாரம் தோட்டக்கலைத் துறை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் இயங்கிவரும் விரிவாக்க சீரமைப்புதிட்டம், வேளாண்மை தொழில்நுட்பமேலாண்மை முகமையின் (அட்மா) திட்டத்தின் கீழ் ஊட்டி வட்டார விவசாயிகளுக்கு உயர் மதிப்பு காய்கறிகளை இயற்கை வேளாண்மை முறையில் சாகுபடி செய்வது குறித்த மாவட்ட அளவிலான இணைய வழி பயிற்சிஅளிக்கப்பட்டது.
இப்பயிற்சியில் சிவக்குமார், உயர் மதிப்புகாய்கறிகளான ப்ரோக்கோலி, இ செலரிலெட்யுஸ், சிவப்பு முட்டைகோஸ், சீனமுட்டைகோஸ் மற்றும் கேல் போன்றவற்றை இயற்கை வேளாண் முறையில் சாகுபடி செய்வது மற்றும் மண் வளத்தை எவ்வாறு மேம்படுத்துவது எனவிவசாயிகளுக்கு பயிற்சிஅளித்தார்.
இப்பயிற்சியில் நாற்பதுக்கும் மேற்பட்டவிவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்ட வட்டார தொழில்நுட்பமேலாளர் சதீஷ், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் அஸ்வினி மற்றும் ரித்திஸ் ஆகியோர் பங்கேற்றனர்.