fbpx
Homeபிற செய்திகள்உலக நன்மைக்காக சாலவரையில் குபேரர் சிறப்பு மகா யாகம்

உலக நன்மைக்காக சாலவரையில் குபேரர் சிறப்பு மகா யாகம்

உலக நன்மைக்காகவும் பொருளாதார வளர்ச்சிக் காகவும் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சாலவரையில் உள்ள குபேரர் கோவிலில் சிறப்பு மகா யாகம் 7 நாட்கள் நடைபெற உள்ளது.

இந்த மகா யாகம் ஏப்ரல் 17-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நடை பெறுகிறது. இந்த மகா யாகத்திற்காக புனித மண் பத்ரிநாத்தில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.

பத்ரிநாத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித மண் கோவை ஆர்ய வைத்ய சாலை தன்வந்திரி கோவிலில் இருந்து இந்த வைத்திய சாலையின் செயல் இயக்குனர் ஸ்ரீ கிருஷ்ணதாஸ் வாரியரால் ஊர்வலமாக வாளையாற்றுக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கிருந்து இந்த மண் தேரில் வைக்கப்பட்டு அதனைச் சுற்றி உள்ள கோவில்களுக்கு கொண்டு செல்லப்பட்டு இன்று காலை 7.30 மணிக்கு சம்பூஜ்ய தயானந்தாஸ்ரமம் ஓலச்சேரி மடாதிபதி சுவாமி கிருஷ்ணாத்மானந்த சரஸ்வதியால் (தர்மாச்சார்ய சபையின் மாவட்டத் தலைவர்) குபேரர் கோவில் நிர்வாக அறங்காவலரும் இந்த ஹோமத்திற்கு ஏற்பாடு செய்துள்ள ஜித்தின் ஜெயகிருஷ்ணனிடம் வழங்கப்பட்டது.

பாலக்காடு மாவட்டம் சாலவரை குபரேபுரியில் இந்த தொடர் மகா யாகம் 7 நாட்கள் வரும் ஏப்ரல் 17-ந்தேதி துவங்கி 23-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதற் கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.

படிக்க வேண்டும்

spot_img