ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாக்குச்சாவடி மையங்கள் மறுசீரமைப்பு செய்தல் தொடர்பாக, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) பாலாஜி உட்பட துறை சார்ந்த உயர் அலுவலர்கள் உள்ளனர்.



