கனரா வங்கியின் கோவை பிராந்திய அலுவலகம்-2 சார்பில், பெரு நிறுவன சமூக பொறுப்பு நிதியில் இருந்து, கொரோனா வார்டில் பயன்படுத்துவதற்காக இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள என்-95 முக கவசங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது. அவைகளை மருத்துவமனை டீன் டாக்டர் ரவீந்திரனிடம் வங்கியின் உதவி பொதுமேலாளர் சதீஷ்குமார் வழங்கினார். அருகில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கௌசல்யா தேவி மற்றும் மருத்துவமனை, வங்கி அதிகாரிகள் உள்ளனர்.