fbpx
Homeபிற செய்திகள்இலவச நீர்மோர் பந்தல் திறப்பு

இலவச நீர்மோர் பந்தல் திறப்பு

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் பங்குனி பெருந்திருவிழா விழாவை முன்னிட்டு, புலியூர் செட்டிநாடு சிமெண்ட் ஆலை சார்பில் இலவச தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

விழாவுக்கு நகரத்தார் காப்பா ளர் மேலை பழனியப்பன் தலைமை வகித்தார்.
ஆன்மீக மன்றத்தலைவர் ஸ்காட் தங்கவேல், மண்டப மேலா ளர் பழனியப்பன், வக்கீல் பழ ஆனந்த், செட்டிநாடு சிமெண்ட் ஆலை அதிகாரிகள் பாலமுருகன், ராஜா செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புலியூர் செட்டிநாடு சிமெண்ட் ஆலை சீனியர் மானேஜர் சுந் தரமூர்த்தி, மக்கள் தொடர்பு அதிகாரி அடைக்கப்பன் ஆகி யோர் செட்டிநாடு சிமெண்ட் ஆலை சார்பில் இலவச நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பக்தர்களுக்கு நீர்மோர், பானகம் போன்றவற்றை வழங்கினர்.

முன்னதாக பசுபதீஸ்வரர் கோவில் ராஜலிங்கம் சிவாச்சாரியார் தண்டபாணி ஓதுவார் மூர்த்திகள் சிறப்புப் பூஜைகள் செய்தனர்.

படிக்க வேண்டும்

spot_img