fbpx
Homeபிற செய்திகள்ஆம்புலன்சை திருடி விபத்தில் சிக்கி மாட்டிக்கொண்ட திருடன்

ஆம்புலன்சை திருடி விபத்தில் சிக்கி மாட்டிக்கொண்ட திருடன்

கோவை அரசு மருத் துவமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 108 அவசர ஊர்தியை திருடிச்சென்ற நபர் லங்கா கார்னர் பாலம் அருகே அரசு பேருந்து மீது மோதி விபத்தை ஏற்படுத்தி சிக்கியுள்ளார்.

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளியை இறக்கிவிட்ட 108 அவசர ஊர்தியை இன்று திடீரென திருடிச்சென்றார். இதனைத்தொடர்ந்து அவசர ஊர்தியை பொதுமக்கள் துரத்திச்சென்றனர்.

அப்போது லங்கா கார்னர் பாலம் தாண்டி ராயல் தியேட்டர் சிக்னல் அருகே அரசு பேருந்து மற்றும் காரின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து அவரை துரத்தி வந்தவர்கள் அவரை பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பிடிபட்ட நபர் மது போதையில் இருந்துள்ளார். மேலும் காவலர்கள் கேட்கும் கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.

அவர் மனநிலை பாதிக்கப்பட்டவரா என்ற கோணத்திலும் , பந்தய சாலை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

படிக்க வேண்டும்

spot_img