fbpx
Homeபிற செய்திகள்அரசு மருத்துவமனையில் அருண்குமார் எம்.எல்.ஏ ஆய்வு

அரசு மருத்துவமனையில் அருண்குமார் எம்.எல்.ஏ ஆய்வு

பெரியநாயக்கன்பாளையம் அரசு பொதுமருத்துவமனையில் கவுண்டம் பாளையம் சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார். கொரோனா நோய் தொற்றுத் தடுப்புப் பணிகளை ஆய்வு செய்த அவருக்கு தலைமை மருத்துவர் சேரலாதன் தடுப்பூசி மைய செயல்பாடுகள் மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து விளக்கினார்.


இதனையடுத்து இசிஜி கருவி ஒன்றை பி.ஆர்.ஜி.அருண்குமார் மருத்துவம னைக்கு வழங்கினார். பின்னர் சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பாளையம் ஊராட்சிப் பகுதிகளில் மருந்து தெளித்தல் மற்றும் கோவிட் சிகிச்சை மையமாக உருவாகவுள்ள ரங்கநாதர் பாலிடெக்னிக் வளாகத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.


பின்னர் சரவணம்பட்டியிலுள்ள பூந்தோட்டக் காலனியில் நிலவும் சுகாதார சீர்கேடு குறித்து சுகாதார அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு அதனை சீர்படுத்த அறிவுறுத்தினார். அப்போது அத்திப்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் சுபத்ரா புருஷோத்தமன், அர்ச்சுனன், உதயகுமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img