கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தன்னார்வ அமைப்புகள் பலர் தாமாக முன்வந்து பிபிஇ கிட்,ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்டவற்றை அரசு மருத்துவமனைக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து செல்ல Let’s Thank Foundation சார்பில் 2 ஆம்புலன்ஸ் வாகனங்களை நம்ம மேட்டுப்பாளையம் அமைப்பின் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு இலவச சேவைக்காக வழங்கினர்.
இந்நிகழ்ச்சிக்கு கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். வட்டாட்சியர் ஷர்மிளா உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கண்ணன், சதீஸ்குமார், மனோகரன், சரவணன், தலைமை செவிலியர் சாரதாமணி, செவிலியர் பிரேமலதா, மண்டல துணை வட்டாட்சியர் பாலமுருகன், வருவாய் ஆய்வாளர் சத்யராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்
இதில் ஊர்க்காவல் படை கம்பெனி கமாண்டர் முனைவர் ஜெய்குமார் நம்ம மேட்டுப்பாளையம் சமூக நலக்குழு ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் கா.ப. ரஹ்மான், பாஷா, ராஜா சாகுல், சத்யா, சாமுவேல், சேரன் ஸ்டூடியோ விஜய், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.