திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 12 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ராயல் என்பீல்டு மற்றும் என்.எம்.சி.டி சேவை நிறுவனம் இணைந்து 72 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கினர்.
என்.எம்.சி.டி என்ற சேவை நிறுவனம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எச்.ஐ.வி நோயால் பாதிக்க ப்பட்ட நபர்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள், திருநங்கைகள், புலம் பெயர்ந்த தொழிலா ளர்களுக்கு பல்வேறு நலத்தி ட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.
இந்த சேவை நிறுவனம் ராயல் என்பீல்டு நிறுவனத்துடன் இணைந்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 12 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ உபகரணங்களை 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருப்பூர் மாவட்ட சார் ஆட்சியர் ஆப்தா ரசூலிடம் ஒப்படைத்தனர்.
மேலும் திருப்பூர் கோவை, பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்களை வழங்குவதாகவும் தெரிவித்தனர்.