fbpx
Homeபிற செய்திகள்அமராவதி சர்க்கரை ஆலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் மடத்துக்குளம் மகேந்திரன் எம்எல்ஏ உறுதி

அமராவதி சர்க்கரை ஆலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் மடத்துக்குளம் மகேந்திரன் எம்எல்ஏ உறுதி

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. உடுமலை, மடத்துக்குளம், பல்லடம், தாராபுரம், பழனி பகுதி கரும்பு விவசாயிகள் ஒப்பந்த அடிப்படையில் ஆலைக்கு கரும்பு சப்ளை செய்கின்றனர்.

ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை அரவை நடைபெறும். இந்த ஆண்டு போதிய கரும்பு வரத்து இல்லாததால் கரும்பு அரவை முன் கூட்டியே கடந்த வாரம் நிறைவடைந்தது.

இந்நிலையில் சர்க்கரை ஆலையை மேம்படுத்துவது தொடர் பாக மடத்து க்குளம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ மகேந் திரன் நேற்று ஆலையில் அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தினார்.

கரும்பு சப்ளை செய்ய பதிவு செய்துள்ள நிலங்கள் விவரம், எத்தனை டன் கரும்பு அரவை, எவ்வளவு சர்க்கரை உற்பத்தி மற்றும் ஆலையின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர், இது பற்றி அரசுக்கு தெரிவித்து ஆலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மகேந்திரன் எம்எல்ஏ உறுதியளித்தார்.

இக்கூட்டத்தில் அலுவ லக மேலாளர் கண்ணன், கரும்பு பெருக்கு அலுவலர் சுப்புராஜ், கணக்கு அலுவலர் முருகன், ஆலை கமிட்டி குழு தலைவர் சின்னப்பன், துணைத் தலைவர் முத்துராமலிங்கம், ஆய்வாளர் வேணுகோபால், பொறியாளர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img