கோவைப்புதூரில் தற்போது வசித்து வரும் மதுரையிலுள்ள ஓர் எளிமை யான குடும்பத்தைச் சார்ந்த சுபா என்ற மாற்றுத் திறனாளி பெண், வாள் வீச்சு போட்டியில் மாநில அளவில் தேர்ச்சி பெற்றார்.
இதன்மூலம் அவர் அண்மையில் ஒடிசா மாநில புவனேஸ்வரில் நடைபெற இருக்கும் அகில இந்திய அளவு போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார்.
அதற்கான முன்னேற்பாடு செலவிற்கு சிவா அறக்கட்டளையின் சார்பில் சுபாவிற்கு நிர்வாக அறங்காவலர் சுப்பிரமணிய சிவா நிதி உதவி அளித்து தேசிய அளவு போட்டியிலும் வெற்றி பெற வாழ்த்தினார்



