எலெக்ட்ரிக் இருசக்கர வாகன நிறுவனம், நெட் வொர்க் விரிவாக்கம், புதிய தயாரிப்புகளை அதன் தொகுப் புசேர்த்தல் மற்றும் புதிய ஏற்றுமதி சந்தைகளில் நுழைதல் ஆகியவற்றின் மூலம் வரும் இரண்டு நிதியாண்டுகளில் கூடுதலாக 4X வளர்ச்சி மற்றும் 200 புதிய விற்பனை நிலையங்களை உருவாக்குவதை இலக்காகக் கொண்டுள்ளது ‘பியூர் இவி’ PURE EV).
இந்நிறுவனம் இன்று நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் (EV2W) பிராண்டு களில் ஒன்றாகும். நிறுவனம் சமீபத்தில் தனது முதல் செயல்திறன் மின்சார மோட் டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியது – (ETRYST 350), இது வளர்ந்து வரும் இந்திய மின்சார வாகனங்கள் (EVs) துறையில் முன்னேறிச் செல்கிறது.
வரவிருக்கும் இரண்டு நிதியாண்டுகளில் மேலும் (4X) வளர்ச்சியை இலக்காகக் கொண்டு, நெட்வொர்க் விரிவாக்கம், அதன் தொகுப்பு புதிய தயாரிப்புகளைச் சேர்ப்பது மற்றும் புதிய ஏற்றுமதி சந்தைகளில் நுழைவதன் மூலம் ஆண்டு வருவாயை 1000 கோடிகளை கடக்க வேண்டும்.
தெலுங்கானாவில் வாக னம் மற்றும் பேட்டரி உற்பத்தி பிரிவுகளை உள்ளடக் கிய 1,00,000 சதுர அடி தொழிற்சாலையை நிறுவனம் நிறுவியுள்ளது, தற்போது 700 க்கும் மேற்பட்ட பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது.
நிறுவனம் மேலும் 2,00,000 சதுர அடி வசதியுடன் 120,000 யூனிட் களின் வருடாந்திர வாகன உற்பத்தி திறன் மற்றும் 0.5 (GWh) வருடாந்திர பேட்டரி உற்பத்தி திறன் கொண்டதாக விரிவுபடுத்தும் செயல்பாட்டில் உள்ளது,
இது FY 23-ன் இறுதியில் 1000-க்கும் மேற்பட்ட பணியாளர்களின் உடன் தயாராகும். ‘பியூர் இவி’ (PURE EV) தலைமை நிர்வாக அதிகாரி ரோஹித் வதேரா கூறுகையில், “நுகர்வோருக்கு மலிவு விலையில் சிறந்த தயாரிப்பை வழங்குவதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம்.
முழு பேட்டரி-பவர்டிரெய்ன் வடிவமைப்பு மற்றும் மேம்பாடு அனைத்தும் IN-HOUSEல் நடப்பதால் செலவுகளை கணிசமாக குறைக்க முடிகிறது. அனைத்து மட்டங்களிலும் செயல்பாட்டு சிறப்பம்சத்தில் தீவிர கவனம் செலுத்துகிறது.
எங்களின் வர்த்தக பங்குதாரர்கள், சப்ளையர்கள், ஊழி யர்கள், முதலீட்டாளர்கள், வாடிக்கையாளர்கள் உட்பட அனைத்து பங்குதாரர்களுக்கும் இந்த பெருமை சென்றடையும். இந்தியா முழுவதும் 125 பிரீமியம் டீலர்ஷிப் அவுட் லெட் நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது” என்றார்.