திருச்சி பைனான்சியர்ஸ் சிட்பண்ட்ஸ் அசோசியேஷன் வெள்ளி விழா நிகழ்ச்சி, திருச்சி &சென்னை பைபாஸ் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரம ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
இதில் மாநில பொருளாளர் கோவிந்தராஜுலு ,அகில இந்திய சிட்ஃபண்ட்ஸ் சங்கத்தின் தலைவர் சிவராமகிருஷ்ணன், தமிழ்நாடு சிட் பண்ட்ஸ் கம்பெனிஸ் சங்கத்தின் மாநில தலைவர் கிருஷ்ணபாரதி, சிட் பண்ட்ஸ் சங்கத்தின் மாநில தலைவர் சிற்றரசு உட்பட மாநிலத்தில் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.