fbpx
Homeபிற செய்திகள்புதிய மின் மாற்றிகள் பயன்பாடு- எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

புதிய மின் மாற்றிகள் பயன்பாடு- எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு மின் உற் பத்தி மற்றும் பகிர்மான கழகம், தருமபுரி மின் பகிர்மான வட்டம், அதியமான்கோட்டை உப கோட்டம், புறவடையில் 100KVA புதிய மின் மாற்றி ரூபாய் 5.40 இலட்சம் மதிப்பீட்டிலும், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், பாலஜங்கமன அள்ளி ஊராட்சி, பழனி கவுண்டன் கொட்டாயில் 100KVAபுதிய மின் மாற்றி ரூபாய் 4.40 லட்சம் மதிப்பீட்டிலும் மின்பற்றாக்குறையை போக்குகின்ற வகையில் புதிய மின் மாற்றிகளை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மின் வாரிய செயற்பொறியாளர் வரதராஜன், உதவி செயற் பொறியாளர் இந்திராணி, இளநிலை பொறியாளர்கள் ஸ்ரீதரன், அமலநாதன், பசுபதி, கவிதா மற்றும் பாமக மாநில இளைஞர் சங்க செயலாளர் எம்.முரு கசாமி, மாவட்ட துணை செயலாளர் காமராஜ், அதியமான் கோட்டை ஒன்றிய குழு உறுப்பினர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img