நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கொரோனா நோய்த்தொற்று தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்வது தொடர்பாகவும், தமிழ்நாடு அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கண்காணிப்பது தொடர்பாகவும் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கெட்சி லீமா அமாலினி, துணை இயக்குநர்(சுகாதார பணிகள்) பாலுசாமி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.