fbpx
Homeபிற செய்திகள்தம்பு பள்ளி ஆண்டு விழா

தம்பு பள்ளி ஆண்டு விழா

பெரியநாயக்கன்பாளையம் அடுத்த பிரஸ் காலனியில் உள்ள தம்பு மேல்நிலைப்பள்ளியின் 53-வது ஆண்டு விழா நடந்தது. முதல்வர் கே.ரமேஷ் வரவேற்றார். பள்ளிச் செயலர் எஸ்.ப்ரீத்தா பிரியதர்ஷினி தலைமை வகித்தார்.

பள்ளிக்குழுத் தலைவர் என்.சி.நந்தகோபால், நிர்வாக அலுவலர் ஜெ.சௌந்தி ரராஜன், கல்வி இயக்குநர் ஆர். குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர் பயனீர் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும், பயனீர் கல்வி நிறுவனங்களின் செயலாளருமான அபர்ணா ராஜ்குமார் பேசும்போது, மாணவர்களுக்கு தனித்திறன் களையும், நற்பண்புகளையும் கற்றுக் கொடுத்து, நாட்டிற்கு நன்மை செய்யும் நல்ல குடிமகன்களாக உருவாக்க வேண்டியது ஆசிரியர்களது தலையாய கடமையாகும் என்று குறிப்பிட்டார்.

கலைத்திறன், விளையாட்டு, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களையும் அவர் வழங்கி பாராட்டினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. சி. மாடசாமி நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img