கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் குழந்தைகளின் கல்வியைத் துவங்கும் விதமாக ஏடு துவங்குதல் என்று அழைக்கப்படும் வித்யாரம்பம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் குழந்தைகளின் விரலைப் பிடித்து அரிசியில் தமிழ் மொழியின் முதல் எழுத்தான அ, பிள்ளையார் சுழி, அம்மா, அப்பா என்று எழுத வைத்தனர்.