கோவை அரசு மருத்துவ கல்லூரியில் ரெம் டெசிவிர் மருந்து விற்பனை துவங்கப்பட் டுள்ளது
கொரோனா வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக் கப்பட்ட நோயாளிகளுக்கு, நோயின் தீவிரத்தைக் குறைப்பதற்காக ரெம்டெ சிவிர் ஊசி மருந்து செலுத்தப்படுகிறது.
ஆனால், மருந்து பதுக்கி வைக்கப்படுவதாகவும் இதனால் தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும் கூறப் பட்டு வந்தது. இந்த நிலையில் தமிழகத்துக்கு 2 லட்சத்து 5 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நேற்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
அதன்படி இன்று முதல் தமிழகத்தில் கோவை, மதுரை சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட உள்ளது.
கோவையை பொறுத்தவரையில் அவினாசி சாலையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் இதற்காக பிரத்யேக இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இங்கு ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நடந்து வருகிறது.