fbpx
Homeபிற செய்திகள்கேபிஆர் கல்லூரியில் ரத்த தானம்

கேபிஆர் கல்லூரியில் ரத்த தானம்

கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின், போதை மருந்து எதிர்ப்பு மற்றும் ரெட் ரிப்பன் கிளப் சார்பில், ‘ரத்த தான விழிப்புணர்வு மற்றும் ரத்தம் கொடையளிப்பு’ நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் முனைவர் செ.பாலுசாமி, ஆலோசகர் மற்றும் செயலர் முனைவர் எஸ்.இராமச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
கோவை, சாந்தி சமூக சேவைகள் இரத்த வங்கி பிஆர்ஓ, சமூக ஆர்வலர் சுரேஷ் பாபு சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவர்கள் ரத்த தானம் செய்வதன் முக்கியத்துவத்தை விளக்கினார்.


ரத்த தானம் செய்வ தால் ரத்த அழுத்தம் குறைவதோடு மாரடைப்பு ஏற்படும் அபாயமும் குறையும் என்றும் அறிவுறுத்தினார்.

கோவை, கொங்கு குருதிக் கொடை நிறுவனர் சந்தோஷ் நட ராஜன், தன்னார்வ ரத்த தானம் செய்பவர்கள் மனித குலத்தின் மீட்பர்கள்.

ஒருவர் தன்னையும் மற்ற சக உயிர்களையும் உண்மை யிலேயே நேசிக்கிறார் என்றால், அதை வெளிப்படுத்த ஒரே வழி ரத்ததானம் செய்வதுதான் என்றார்.

கணிதத்துறை உதவிப்பேராசிரி யர் எம்.கார்த்திக், வணிகவியல்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் என்.கவிதா ஆகியோர் இந்நிகழ் வினை ஒருங்கிணைத்து நடத்தினர்.
புல முதன்மையர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img