fbpx
Homeபிற செய்திகள்எக்மோ சிகிச்சை மூலம் நுரையீரல் நோயாளியை காப்பாற்றி போர்டிஸ் மருத்துவமனை சாதனை

எக்மோ சிகிச்சை மூலம் நுரையீரல் நோயாளியை காப்பாற்றி போர்டிஸ் மருத்துவமனை சாதனை

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றும் நுரையீரல் செயல்பாடு மோசமாக இருந்த 34 வயது நோயாளி, சென்னை வடபழனியில் உள்ள போர்டிஸ் மருத்து வமனையில் எக்மோ சிகிச்சை பயனால் குண மடைந்துள்ளார்.

இதன் மூலம் பலவீனமான நுரையீரல் செயல்பாடு உள்ள நோயாளிகளுக்கு இந்த சவாலான காலங்களில் எக்மோ சிகிச்சை ஒரு சிறந்த தீர்வாக அமையும் என்று இம்மருத்துவமனையின் தலைவரும் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் கோவினி பாலசுப்பிரமணி தலைமையிலான இருதய அறுவை சிகிச்சை நிபுணர்கள், நுரையீரல் நிபுணர்கள், தீவிர சிகிச்சை நிபுணர்கள் அடங்கிய மருத்துவ குழுவினரால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
நோயாளியை டாக்டர் கோவினி பாலசுப்ரமணி மற்றும் அவரது தலைமை யிலான மருத்துவ குழு பரிசோதித்து நோயாளிக்கு நுரையீரல் மாற்று சிகிச்சைக்கு பரிந்துரை செய்தனர். அவர் உட னடியாக எக்மோ ஆதரவில் வைக்கப்பட்டார்.

நோயாளியின் ஆரோக்கியத்தில் படிப் டியாக முன்னேற்றம் ஏற்பட்டது. டாக்டர் கோவினி மற்றும் அவரது குழுவினரின் தீவிரமான கண்காணிப்பின் கீழ் இப்பொழுது நோயாளியால் பிசியோதெரபி செய்ய மற்றும் நடக்க முடிகிறது.

திரு. ஹமீம் 200 நாட்களுக்கு மேலாக எக்மோ ஆதரவில் உயிர்ப் பிழைத்துள்ளார்.
இது தொடர்பாக டாக்டர் கோவினி பாலசுப் பிரமணி கூறுகையில், “சரியான நோயாளிக்கு சரி யான சமயத்தில் எக்மோ சிகிச்சை கொடுத்தால் அவரின் உயிரை காப்பாற்ற முடியும்.

தொற்றுநோய் காரணமாக இந்த சோதனை காலங்களில் கூட, வடபழனி போர்டிஸ் மருத்துவமனையில் இந்த சிகிச்சை கிடைக்கிறது என்றார்.

போர்டிஸ் மருத்து வமனையின், சென்னை மண்டல இயக்குநர் டாக்டர் சஞ்சய் பாண்டே கூறுகையில், “நோயாளி களை மையமாகக் கொண்ட அணுகுமுறையை எப்போதும் உறுதி செய்வதும், சிக்கலான நோயாளிகளுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சையை வழங்குவதும் எங்களது குறிக்கோளாகும் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img