ஜே.பி. கெமிக்கல்ஸ் அண்டு பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம், இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மருந்து நிறுவனங்களில் ஒன்றாகும்.
இது, உயர் ரத்த அழுத்தத்திற்கான மருத்து வத்தில் முன்னணி களத் தில் செயல்படுகிறது. இந்நி றுவனமானது, நாள்பட்ட சிறுநீரக நோய்க்கு சிகிச்சை பெறும் நோயாளிக்கு சேவையாற்றும் வகையில், ரெனோவா என்கிற புதிய பிரிவை நெப்ராலஜி பிரிவில் தொடங்கி உள்ளது.
இந்த புதிய பிரிவானது நாள்பட்ட சிறுநீரக நோயின் உயர் ரத்த அழுத்தத்தை நிர்வகிப்பது முதல் இறுதிக் கட்ட சிறுநீரக நோய் வரையிலான முழுமை யான சிறுநீரக பராமரிப்பு குறித்து மட்டுமே கவனம் செலுத்தும்.
சிலாக்கரே மற்றும் நிக்கார்டியா போன்ற பிராண்டுகளுடன் உயர் ரத்த அழுத்தத்தில் முன்னணி வீரர்களில் ஒருவராக வெற்றிகரமாக ஆன பிறகு, ஜேபிசிபிஎல் இப்போது சி.கே.டி நோயா ளிகளிடமும் கவனம் செலுத்தத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
ஜே.பி. கெமிக்கல்ஸ் அண்ட் பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் நிறுவனத் தின் தலைமை நிர்வாக அதி காரி மற்றும் முழு நேர இயக்குநரான நிகில் சோப்ரா கூறுகையில், “உயர் ரத்த அழுத்த பிரிவின் தலைவர்களில் ஒருவராக இருப்பதால், நாள்பட்ட சிறுநீரக நோய் நாட்டில் ஒரு முக்கிய பிரச்சினை என்பதை நாங்கள் உணர்கிறேன்.
மேலும் இந்த நோயின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. சி.கே.டி உடன் தொடர்புடைய உயர் இரத்த அழுத்த நோயாளிகளின் எண் ணிக்கை அதிகரித்து வருகின்றன.
அதனால், எங்களின் முயற்சி சி.கே.டி நோயாளிகளின் வளர்ந்து வரும் தேவைகளுக்கு சேவை செய்ய உதவும் என்று நாங்கள் நம்பு கிறோம். என்று கூறினார்.