fbpx
Homeதலையங்கம்ஆபாச இணையதளம் முடக்கம் தொடரட்டும்!

ஆபாச இணையதளம் முடக்கம் தொடரட்டும்!

மத்திய அரசு கடந்த ஆண்டு புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தை அமல்படுத்தியது. இதன் மூலம் இணைய விதிமுறை மீறல்களில் ஈடுபடும் தளங்களை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து அதை முடக்கி வந்தது. அந்த வகையில் வாட்ஸ் அப், யூடியூப் போன்ற கணக்குகளை மத்திய அரசு விதிகளை மீறி செயல்படுவதாக கூறி முடக்கி வருகிறது.

இந்நிலையில் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 67 ஆபாச இணையதளங்களை முடக்கியுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், புனே நீதிமன்ற வழிகாட்டுதலின்படி 63 ஆபாச இணையதளங்களையும், உத்தராகண்ட் உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி 4 ஆபாச இணையதளங்களையும் முடக்கி உள்ளதாகவும், இது பெண்களின் கண்ணியத்திற்கு களங்கம் விதிக்கும் வகையில் உள்ளதாகவும், ஆபாசத்தை பரப்பும் நோக்கில் செயல்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

சிறார்களையும் இளைஞர்களையும் தவறான பாதையில் வழிநடத்தும் ஆபாச இணைய தளங்கள் இன்னும் நிறைய இருக்கின்றன.

இந்தியத் திருநாட்டின் கலாச்சார சீரழிவைத் தடுக்க வேண்டிய பெரும் பொறுப்பு நம்முன் உள்ளது. எனவே நீதிமன்ற வழிகாட்டுதலுக்காக காத்திராமல் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தொடர்ந்து ஆய்வு செய்து ஆபாச இணைய தளங்களை முடக்கும் பணியை தொய்வின்றி செய்ய வேண்டும்.

புற்றீசல் போல முளைக்கும் ஆபாச இணைய தளங்களை வேரோடு அகற்ற வேண்டியது நம் கடமை!

படிக்க வேண்டும்

spot_img