ஸ்கோடா ஆட்டோவும் பிராந்திய பார்ட்னர் மற்றும் முதலீட்டாளருமான தான்ஹ் காங் குருப்பும் ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் குஷக் கார்களின் அசெம்பிளிக்காக வியட்நா மில் அதிகாரபூர்வமாக ஒரு புதிய உற்பத்தி ஆலையை மார்ச் 26 அன்று திறந்துள்ளது.
இது இந்த பிரான்டின் சர்வ தேசமயமாக்கலின் உத்தியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை குறிக்கிறது. ஐரோப்பாவையும் கடந்து நிற்கின்ற தனது இருப்பை வலுவாக்கும் குறிக்கோளை வலுப்படுத்துகிறது.
இந்தியாவிலிருந்து குஷக் எஸ்யூவியின் கம்ப்ளீட்லி நாக்ட்-டவுன் கிட்சை இறக்குமதி செய்து உள்ளூரிலேயே அசெம்பிள் செய்வதன் மூலம் ஸ்கோடா ஆனது புவிசார் சினர்ஜிகளின் நன்மையை பெறுகிறது.
ஸ்லாவியா செடானை சேர்த்துக்கொள்வதற்கு இந்த உற்பத்தி திட்ட மானது கோடையில் விரிவடையும் மற்றும் இதுவும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கம்ப்ளீட்லி நாக்ட்-டவுன் கிட்சை கொண்டு அசெம்பிள் செய்யப்படும்.
வியட்நாம் சந்தையில் தடம் பதித்ததிலிருந்து 15 ஸ்கோடா விற்பனை நிலையங்கள் திறக்கப்பட் டுள்ளன மற்றும் 2025 க்குள் இந்த வலைத்தொடரானது 32 டீலர்ஷிப்புகளாக விரிவுபடுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
ஸ்கோடா ஆட்டோவின் சிஇஓ க்ளாஸ் ஜெல்மர் கூறுகையில், “இந்த புதிய அசெம்பிளி லைனை திறப்பது என்பது விரைவாக வளர்ந்து வரும் வியட்நாமிய சந்தையில் எங்கள் விரிவாக்கத்தின் ஒரு மைல்கல்லை குறிக்கிறது “ என்றார்.
தான்ஹ் காங் குருப் வாரியத்தின் தலைவரான குயேன் ஆன்ஹ் துவான் கூறுகையில்,
“வியட்நாமில் முதல் ஸ்கோடா உற்பத்தி ஆலை என்பது தான்ஹ் காங் குருப்பால் நன்கு திட்ட மிடப்பட்டு முதலீடு செய்யப்பட்ட தான்ஹ் காங் வியட் ஹுங் ஆட்டோமோட்டிவ் மற்றும் துணை வளாகத்தில் மேற்கொள்ளப்படும் முக்கிய ப்ராஜெக்ட் ஆகும்“ என்றார்.