கோவை புலியகுளம் புனித அந்தோணியார் உயர் நிலைப்பள்ளியில் நடந்த 75வது குடியரசு தினவிழாவில் தலைமையாசிரியை அமலோற்பவ மேரி தேசிய கொடியை ஏற்றி வைத்து தேசிய மாணவர்படை மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அருட்பணி.ஞானப் பிரகாசம் “இந்திய அரசியல் அமைப்பு” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
சமூக சேவைகள் பல புரிந்த மாணவன் ரோகித் அவர்களுக்கு” சிறந்த தேசிய மாணவர்படை மாணவர்” என்ற விருது வழங்கி கவுரவபடுத்தப்பட்டது.
மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளியின் தேசிய மாணவர்படை அலுவலர் ஜி.ஆல்பர்ட் அலெக்ஸ்சாண்டர் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.