தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 15வது கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் ராஜமோகன் தலைமையேற்று பேசினார். உபதலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரியின் செயலாளர் ராஜ்குமார் வரவேற்புரையாற்றினார்.
கல்லூரியின் செயலாளர் மகேஸ்வரன் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் டாக்டர். மதளைசுந்தரம் கல்லூரியின் ஆண்டு அறிக்கையினை சமர்பித்தார்.
இவ்விழாவில் மதுரை அண்ணா பல்கலைகழக மண்டலம் டீன் டாக்டர்.லிங்கதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்லூரியின் ஆண்டு மலரை வெளியிட்டார்.
இதில் 2024-25-ம் கல்வியாண்டின் சிறந்த மாணவ, மாணவிகளாக கட்டிடவியல் துறை மாணவி ஸ்வேதா, கணிப்பொறி மற்றும் அறிவியல் துறை மாணவன் முகிலன், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் துறை மாணவி விஷ்னுபிரியா, எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன் துறை மாணவி ரிந்தியா, இயந்திரவியல் துறை மாணவன் ஸ்ரீராம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் துணை முதல்வர்கள் டாக்டர்.மாதவன், டாக்டர்.சத்யா, வேலைவாய்ப்பு அலுவலர் டாக்டர் கார்த்திகேயன், ஆண்டு விழாவின் ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் வெனிஸ்குமார், டாக்டர். ஆதிலிங்கம் மற்றும் பேராசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர். கல்லூரியின் இணைச்செயலாளர் நவீன்ராம் நன்றியுரை கூறினார்.