fbpx
Homeபிற செய்திகள்வீடு வீடாக வாக்காளர்களை சந்தித்து திமுகவுக்கு ஆதரவு திரட்ட வேண்டும் நிர்வாகிகளுக்கு நா.கார்த்திக் அறிவுறுத்தல்

வீடு வீடாக வாக்காளர்களை சந்தித்து திமுகவுக்கு ஆதரவு திரட்ட வேண்டும் நிர்வாகிகளுக்கு நா.கார்த்திக் அறிவுறுத்தல்

கோவை மாநகர் மாவட்ட திமுக, பகுதிச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், பிஎல்ஏ&2 பாகமுகவர்கள் கூட்டம் பகுதி வாரியாக நடைபெற்றது.
பீளமேடு பகுதி -3 திமுக வட்டச் செயலாளர்கள், பிஎல்ஏ-2 பாகமுகவர்கள் கூட்டம் சவுரிபாளையம் பாரதி நகர் சமுதாயக் கூடத்தில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) கலந்து கொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்தும், வாக்காளர்களைச் சந்தித்து, வாக்காளர்கள் குறித்த குடும்ப விவரங்களைத் திரட்டுவது குறித்தும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கிப் பேசினார்.

சிங்காநல்லூர் தொகுதி பார்வையாளர், அயலக அணி மாநில துணைச் செயலாளர் முத்துவேல் ராமசாமி முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வே.பாலசுப்பிரமணியம், பொதுக்குழு உறுப்பினர் இரா.மணிகண்டன், பீளமேடு பகுதி -3 திமுக செயலாளர் இரா.சேரலாதன், வட்டக் கழகச் செயலாளர்கள் மா.சிவக்குமரன், மணிகண்டன், சிங்காநல்லூர் தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் ஐடி விங் ஜேசுதாஸ், சோசியல் மீடியா அன்சாரி, பிஎல்ஏ&-2 பாகமுகவர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img