குறிஞ்சிப்பாடியில் புதிய தாலுகா அலுவலகம் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடலூருக்கு சமீபத்தில் வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின், மாவட்டத்தில் புதிய திட்டப்ப ணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது 10 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ஒன்றான குறிஞ்சிப்பாடியில் புதிய தாலுகா அலுவலக கட்டிடம் கட்டப்படும் என்று அறிவித்தார். அதன் படி குறிஞ்சிப்பாடியில் புதிய தாலுகா அலுவலகம் கட்டுவ தற்கு அண்ணாநகர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இடம் தேர்வு செய்யப் பட்டுள்ளது.
இந்த இடத்தை தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து வட்டார கல்வி அலுவலகம் மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் இயங்கும் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தை யும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, மாவட்ட கலெக் டர் சிபி ஆதித்யா செந்தில்குமார். குறிஞ்சிப்பாடி தாசில்தார் விஜய் ஆனந்த், மாவட்ட கல்வி குழு தலைவர் பொறியாளர் சிவக்குமார் மற்றும் அரசு அதிகாரிகள், தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.