தமிழ்நாட்டின் பிரபல மருத்துவமனையான எம்ஜிஎம் ஹெல்த்கேர் நலம் என்ற பெயரில் கிளினிக்கை தொடங்கியிருக்கிறது. பல்வேறு துறைகளின் நிபுணர்களை உள்ளடக்கிய குழுவைக் கொண்டிருக்கும் இந்த கிளினிக், அறிவியல் ரீதியிலான மற்றும் முழுமையான அணுகுமுறையை கடை பிடிக்கும்.
இந்த கிளினிக்கை நடிகை குஷ்பூ சுந்தர் தொடங்கி வைத்தார். உடலில் சேர்ந்திருக்கும் அளவுக்கு அதிகமான கொழுப்பைக் கரைக்கவும், இரத்த சர்க்கரை அளவுகளையும் மற்றும் கொலஸ்ட்ராலையும் சீராக்க நலம் கிளினிக் செயல்படுத்தவிருக்கும் சிகிச்சை திட்டங்கள் முக்கியமானதாக இருக்கும்.
இது குறித்து எம்ஜிஎம் ஹெல்த் கேர் நிர்வாக இயக்குனர் டாக்டர். பிரசாத் ராஜகோபாலன் மற்றும் இயக்குனர் டாக்டர். உர்ஜிதா ராஜகோபாலன் கூறியதாவது:
அளவுக்கதிக உடல் எடையும், பருமனும் நாம் வாழும் இந்த காலகட்டத் தில் அதிக கவலை ஏற்படுத்தும் பொது சுகாதார பிரச்சனைகளுள் ஒன்றாக உருவெடுத்திருக்கிறது.
இந்நிலையில், புதிதாக தொடங்கப்பட்டிருக்கும் நலம் கிளினிக் மருத்துவர்கள், உணவு முறை நிபுணர்கள், உளவியலாளர்கள், இயன்முறை சிகிச்சையாளர்கள் மற்றும் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் என பல்வேறு தரப்பினரையும் ஒரு குழுவாக இது ஒருங்கிணைக்கிறது. இதன் மூலம் ஒரு விரிவான, முழுமையான மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சை திட்டத்தை உடற்பருமனால் அவதியுறும் நபர்களுக்கு வழங்குவதே இதன் நோக்கமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
உள்ளார்ந்த மருத்துவத் துறையின் இயக்குனரும், முதுநிலை மருத்துவருமான டாக்டர்.சாமிக்கண்ணு பேசுகையில், “உடல் எடையைக் குறைப்பதற்கு ஒரு தனிச்சிறப்பான, அறிவியல் அடிப்படையிலான, பயனுள்ள இலக்கை அடைவதற்கான ஒரு அணுகுமுறையை நலம் திட்டத்தின் மூலம் அறிமுகம் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்“ என்றார்.