fbpx
Homeபிற செய்திகள்கௌசிகா நதியை சீரமைக்க மார்ட்டின் அறக்கட்டளை ரூ.50 லட்சம் நிதியுதவி

கௌசிகா நதியை சீரமைக்க மார்ட்டின் அறக்கட்டளை ரூ.50 லட்சம் நிதியுதவி

கோவையில் கௌசிகா நதியை சீரமைக்கும் திட்ட முயற்சிக்கு மார்ட்டின் நல அறக்கட்டளை 50 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது.

இதற்கான காசோலை வழங்கும் விழா, இன்று (18ந் தேதி) காலை கோவை ரேஸ்கோர்ஸ்சில் உள்ள கோயம்புத்தூர் ரோட் டரி மாவட்டம் 3201 ரோட்டரி செயலகத்தில் நடைபெற்றது.

விழாவில் ரோட்டரி கிளப் 3201 மேம்பட்டு குழு உறுப்பினர்கள் தலைவர் லீமா ரோஸ் மார்ட்டின் கலந்து கொண்டு ரோட்டரி மாவட்ட 3201 கவர்னர் வக்கீல் சுந்தரவடி வேலுவிடம் ரூ.50 லட் சத்துக்கான நிதியை வழங் கினார்.
கௌசிகா நீர்க்கரங்கள் இந்த திட்டத்தில், வையம் பாளையத்திலிருந்து தேவம் பாளையம் வரையிலான 6 கி.மீ., தூரத்திற்கு, கௌசிகா நீர்க்கரங்கள், ரோட்டரி மாவட்டம் 3201 உடன் இணைந்து மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்கான விரிவான திட்ட அறிக்கை, தொழில் நுட்ப ரீதியாகவும், சுற்றுப் புற சூழல் மற்றும் சமுதாய ஒத்துழைப்புடன் தயார் செய்யப்பட்டுள்ளது.
விழாவில் கோயம்புத் தூர் ஆலம் ரோட்டரி கிளப் தலைவர் டெய்ஸி மார்ட்டின், கௌசிகா நீர்க்கரங்கள் ஒருங்கிணைப் பாளர் மற்றும் கோவை ரோட்டரி கிளப் உறுப் பினர் சூர்யா குமாரி, ரோட்டரி மாவட்டம் 3201 உதவி கவர்னர் கவிதா கோபாலகிருஷ்ணன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக நடைபெற்ற விழாவுக்கு ரோட்டரி மாவட்டம் 3201 கவர்னர் என்.சுந்தரவடிவேலு தலைமை வகித்தார்.
இதுகுறித்து வக்கீல் சுந்தரவடிவேலு கூறியதாவது:-

ஆறுகளை புதுப்பிக் கவும், தண்ணீரை சேமிப் பதிலும் கடந்த 15 ஆண்டுகளாக கௌசிகா நீர்கரங்கள் அமைப்பை உருவாக்கி செல்வராஜ் பணியாற்றி வருகிறார். இந்த அமைப்பு, நீர்நிலைகளை பாதுகாக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு திட்டங் களை செயல்படுத்தியும் வருகிறது.

ரோட்டரி மாவட்டம் 3201, இந்த அமைப்புடன் இணைந்து நீண்ட கால அடிப்படையில் காட்டு பண்ணாரியம்மன் கோவில் முதல் தேவனாம் பாளையம் தடுப்பணை வரை 20 கி.மீ., தூரத்துக்கு மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டங்களை மேற்கொள்ள திட்டமிட் டுள்ளது. முதல் கட்டமாக 6 கி.மீ., தூரத்துக்கு எவ்வாறு கால்வாய்களை தூர் வாருவது மற்றும் சுற்றுச் சூழலை மீண்டும் கொண்டு வர கவனம் செலுத்தப்படும்.
மேற்கண்டவாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img