கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட போடிச்சிப்பள்ளி, அக்கொண்டப்பள்ளி, சின்னட்டி மற்றும் ஜெக்கேரி ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வேளாண்மைத் துறை சார்பாக நடை பெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சித்தலைவர், கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம், போடிச்சிப்பள்ளி ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், ரூ.9 லட்சத்து 32 ஆயிரம் மதிப் பில் கட்டப்பட்டு வரும் புதிய நியாய விலைக் கடை கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, பைரமங்கலம் ஊராட்சி, அக்கொண் டப்பள்ளி கிராமத்தில் ராயக்கோட்டை முதல் அத்திப்பள்ளி செல்லும் தேசிய நெடுஞ்சாலைக் காக வீடு இழந்த 11 குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டு தற்போது கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ், வீடுகள் கட்டப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், சின்னட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.8 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் கட்டிடம் பழுதுபார்க்கப்பட்ட பணிகளையும், மேலும், மாணவர்களின் வாசிப்பு திறன், ஆங்கில எழுத்து திறன்களை கேட்டறிந்தார்.
தொடர்ந்து, ஜெக்கேரி கிராமத்தில், வேளாண்மைத் துறை சார்பாக, விவசாயி ராமேஷ்பாபு, முதலமைச் சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ், உயிர்ம மாதிரி பண்ணைத்திடல் அமைத்து பாரம்பரிய நெல் ரகமான தூயமல்லி நெல் விதையினை ரூ.10,000 (100 சதவிகித மானியம்) மானிய விலையில் பெற்று சாகுபடி செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டார்.
வேளாண்மைத் துறையின் மூலம் அளிக்கப்பட்ட பயிற்சிகளின் மூலம் தனக்கு தேவையான இடுபொருட்களை இயற்கையான முறையில் தானே தனது வயலில்
சொந்தமாக தயாரித்து பயன்படுத்துவதால், இடுபொருள் வாங்கும் செலவு குறைவதுடன், தரமான இயற்கை விவசாயம் செய்து தனது வருமானத்தினை பெருக்கி, இயற்கைச் சூழலையும் பேணி பாதுகாத்து வருவதாக மாவட்ட
ஆட்சித்தலைவரிடம் தெரிவித்தார்.
மேலும், விவசாயி ஜனார்தனனுக்கு மொத்த விலையில், ரூ.66,778 (50%) மானியத்தில் இயந்திரங்களை எடுக்கும் கருவியை ஆட்சித்தலைவர் வழங்கினார்.
தொடர்ந்து, ஜெக்கேரி கிராமத்தில், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் (2023-24) கீழ், ரூ.3 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் கட்டிட கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) கவிதா, செயற்பொறியாளர் மலர்விழி, தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் இந் திரா, வேளாண்மை உதவி இயக்குநர் ஜான் லூர்து சேவியர், வேளாண் அலுவலர் அருள்தாஸ், துணை வேளாண் அலுவலர் வெற்றிவேல், உதவி வேளாண் அலுவலர்கள் முனிராஜ், ரவிச்சந்திரன், வினோத் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ் பாபு உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.