Homeபிற செய்திகள்வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்ற கொங்கு கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்ற கொங்கு கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் உணவு மற்றும் விடுதி மேலாண்மைத் துறையில் (பிஎஸ்சி கேட்டரிங் சயின்ஸ் அன்ட் ஹோட்டல் மேனேஜ்மென்ட்) பயின்ற மூன்றாம் ஆண்டு 15 மாணவர்கள் உலகிலேயே உணவு பொருட்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடான டிரானாவில் உள்ள புகழ் பெற்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் (BOUGAINVILLE BAY RESORT AND SPA) வருடத்திற்கு ரூ.4 லட்சம் ஊதியத்துடன் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர்.

அம்மாணவர்களை கல் லூரியின் தாளாளர் தங் கவேல், கல்லூரியின் முதல்வர் முனைவர் வாசுதே வன், துறை தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் பாராட்டினர்.

முன்னாள் மாணவர்கள் பலர் ஸ்காட்லாந்து, அமெரிக்கா, மலேசியா, மாலத்தீவு, துபாய், அபு தாபி, கனடா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் பணியாற்றி வருகின்றனர்.

படிக்க வேண்டும்

spot_img