fbpx
Homeபிற செய்திகள்கோவையில் கரூர் வைஸ்யா வங்கி, விஜிஎம் அறக்கட்டளை ரத்த வங்கி துவக்கம்

கோவையில் கரூர் வைஸ்யா வங்கி, விஜிஎம் அறக்கட்டளை ரத்த வங்கி துவக்கம்

கரூர் வைஸ்யா வங்கி மற்றும் விஜிஎம் அறக்கட்டளை இணைந்து, கோவை திருச்சி சாலையில் அமைந்துள்ள 150 படுக்கைகள் கொண்ட விஜிஎம் பல்நோக்கு மருத்துவமனையில் “கேவிபி-விஜிஎம் அறக்கட்டளை ரத்த வங்கி”யை உலக ரத்த தான தினத்தன்று திறந்து வைத்தது.
இந்நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் மற்றும் கரூர் வைஸ்யா வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ரமேஷ் பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினர் களாக கலந்து கொண்டனர்.
இது குறித்து எலும்பியல் துறைத் தலைவர் டாக்டர் சுமன் கூறுகையில், “கோவையில் இந்த புதிய ரத்த வங்கி செயல்படுகிறது. 1,800 சதுர அடி பரப்பளவிலான இந்த வசதி, பாதுகாப்பு, தரம் மற்றும் செயல்திறனுக்கான உயர் ஒழுங்குமுறை தரநிலைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

கரூர் வைஸ்யா வங்கியின் நிர் வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ரமேஷ் பாபு கூறியதாவது:
கேவிபி விஜிஎம் அறக்கட்டளை இரத்த வங்கியின் திறப்பு விழாவும், எங்கள் விரிவான சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு திட்டமான கேவிபி ஆரோக்கிய திட்டத்தின் முறையான தொடக்கமும், உடனடித் தேவைகள் மற்றும் நீண்டகால சமூக நல்வாழ்வை ஆதரிப்பதில் எங்கள் அர்ப் பணிப்பை பிரதிபலிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் செய்தியாளர் சந்திப்பில் விஜிஎம் மருத்துவ மனையின் தலைவரும் விஜிஎம் இரத்த வங்கி திட்டத்தின் தலைவருமான டாக்டர் வி.ஜி. மோகன் பிரசாத் கூறுகையில், “கோவை மக்களுக்கு இந்த வசதியை கொண்டு வருவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். ரத்தம் இல்லாததால் எந்த உயிரும் இழக்கப்படக்கூடாது என்பதை உறுதி செய்வதே எங்கள் இலக்கு. நவீன உபகரணங்கள், பயிற்சி பெற்ற மருத்துவ ஊழியர்கள் மற்றும் 24/7 கிடைக்கும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன், இந்த மையம் கடைசி நேர ரத்த பற்றாக்குறையை நீக்கி, நோயாளிகளின் நலனை மேம்ப டுத்துவதை நோக்கமாகக் கொண் டுள்ளது” என்றார்.

இந்த தொடக்க நிகழ்வில், தன்னார்வ ரத்த தான முகாமும் நடைபெற்றது.
நிறைவாக தன்னார்வ இரத்த தானம், நன்கொடையாளர் விழிப்புணர்வு, இரத்த தானத்தில் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் கூறுப் பிரிப்பின் முக்கியத்துவம் ஆகியவை இதில் மையமாக இருப்பதாக, டாக்டர் மித்ரா பிரசாத், கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைத் தலைவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img