fbpx
Homeபிற செய்திகள்உயர்கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு வழிகாட்டி கையேடு வழங்கிய கரூர் ஆட்சியர்

உயர்கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு வழிகாட்டி கையேடு வழங்கிய கரூர் ஆட்சியர்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நான் முதல்வன் கல்லூரிக்கனவு 2025 திட்டத்தை நேற்று தொடங்கி வைத்ததை தொடர்ந்து, கரூர் மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுச் செல்லும் மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரி கனவு” நிகழ்ச்சியானது கரூர் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் பேசியதாவது:

12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் தங்களின் எதிர்கால கனவினை நனவாக் கும் வகையில் அவர்களின் உயர்கல்விக் கான வாய்ப்புகள் பற்றிய பாட வாரியான பட்டப்படிப்புகள், பட்ட யப்படிப்புகள் என்னென்ன உள்ளன என்பதையும், கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதையும், மேற்படிப்பினை முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்புகள், போட்டித் தேர்வுகள் மற்றும் தொழில் வழிகாட்டல், ஊக்கப்படுத்துதல், வங்கிக்கடன் மற்றும் உதவித்தொகை பெறுதல் போன்ற விவரங்கள் தலைசிறந்த வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்டு வழி காட்டுதல்கள் வழங்கப்படுகின்றது.
இத்தகைய நிகழ்ச்சிகள் மாணவ, மாணவிகளின் எதிர்கால குறிக் கோளை திட்டமிட்டு அடையவும், வெற்றி பெறவும் வழிவகை செய்யும். மேலும், தோல்விகளை வெற்றிகளின் தொடக்கமாக மாணவர்கள் எடுத்துக்கொண்டு முன்னேற வேண்டும்.

“நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரி கனவு” நிகழ்ச்சி இத்தருணத் தில் நடத்தப்படுவது மாணவ- மாணவியர்களுக்கு மிகுந்த பயனுள்ள நிகழ்ச்சியாக அமைந்துள்ளது.
குறிப்பாக எதிர்காலத்தில் எந்தெந்த துறைகளில் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. முன்னேறிவரும் அறிவியல் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாணவ, மாணவியர்கள் தங்களது திறன்களை எவ்வாறு மென்மேலும் வளர்த்துக்கொள்ளலாம் உள்ளிட்ட பல்வேறு பயனுள்ள தகவல்களை துறை வல்லுநர்கள் இந்நிகழ்ச்சியில் எடுத்துரைக்கின்றனர்.

மேலும்,மாணவ- மாணவியர்கள் தங்களின் உயர் கல்விக்கு தேவை யான கல்வி கடன் பெறுவது எப்படி, தங்களுக்கு தகுந்த படிப்பு களை எப்படி தேர்வு செய்வது உள் ளிட்ட எதிர்கால வாழ்க்கைக்கு அடித்தளமாக விளங்கும் உயர்கல்வி படிப்பிற்கான இச்சிறப்பு வழிகாட்டி நிகழ்ச்சியினை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்தார்.
பின்னர், உயர்கல்வி செல்லும் மாணவ- மாணவியர்களுக்கு வெற்றி கதைகள், உயர்கல்வியின் முக்கியது வம், உயர்கல்வி தொடர ஆதரவு, நான் முதல்வன், மருத்துவம், விவசாயம், கால்நடை மருத்துவம், பொறியியல், சட்டம், மீன் வளம் மற்றும் கலை மற்றும் அறிவியல் துறைகள் குறித்து பல்வேறு வல்லுநர்கள் வழிகாட்டி பேசினார்கள்.

இந்நிகழ்ச்சியில், மாணவர்கள் பார்த்துப் பயன்பெறும் வகையில் பல்வேறு துறைகளின் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணராய புரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) செல்வமணி, தனித்துனை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பிரகாசம், மருத்துவ கல்லூரி முதல்வர் மரு. லோகநாயகி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வசந்த்குமார், கரூர் வருவாய் கோட்டாட்சியர் முகமது பைசல், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இளங்கோ, ஆதி திராவிடர் நல அலுவலர் பால சக்திகங்காதரன், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ஜோதி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரியா உள்ளிட்ட பல்வேறு அரசு துறை உயர் அலுவலர்கள், துறை வல்லுநர்கள் மற்றும் மாணவ- மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img