ஐடி துறையில் சாதிக்க விரும்பும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் முன்னணி பயிற்சி நிறு வனமான எலிசியம் அகாடமி தேனியில் அதன் புதிய கிளையை தொடங் கியுள்ளது
தேனி, – பெரியகுளம் சாலையில் உள்ள ஸ்டேட் பேங்க் வங்கி அருகில் புதிய கிளை தொடங் கப்பட்டுள்ளது தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள் கலந்து கொண்டு பயிற்சி நிறுவ னத்தை தொடங்கி வைத்தனர், பயிற்சி மையத்தில் மாணவ மாணவிகள் ஆர்வமாக கலந்து கொண்டனர்.
கல்லூரி பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் ஐ.டி துறையில் சாதிப்பதற்கும், ஐடி நிறுவனங்களில் பணியில் சேர்வதற்கான ஐடி துறையை சார்ந்த பயிற்சியை இந்த நிறுவனம் மாணவர்களுக்கு அளித்து வருகிறது.
மேலும் பொறியியல் மற்றும் கலை கல்லூரியில் படித்து பட்டம் பெற்று ஐடி துறையில் பணி புரிய ஆர்வமுள்ள மாணவர்க ளுக்கும் இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு முன்னணி ஐ.டி நிறுவனங்களில் பணி கிடைக்கும் வாய்ப்பினை இந்த நிறுவனம் மாணவர்களுக்கு உருவாக்கி தருகிறது. சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பெரு நகரங்களில் மட்டும் செயல்பட்டு வந்த இந்தப் பயிற்சி நிறுவனம் தற்போது தேனியில் தொடங்கி இருப்பதால் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கிராமப்புற மாண வர்கள் ஐ.டி துறையில் சாதிப்பதற்கு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என பயிற்சி நிறுவனத்தில் உரிமையாளர் சிவனேசன் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் வெளிச் சம் அறக்கட்டளை சிதம்ப ரம் மற்றும் முன்னாள் தேனி மேலப்பட்டு இந்து நாடார் உறவின்முன்னாள் சங்கத் தலைவர் ராஜ்மோ கன் மற்றும் தொழிலதிபர் அஜய் கார்த்திராஜா, ராமஜெயம் ஏஜென்சிஸ் நம் பெருமாள் சாமி, கம் மவார் சங்கம் மற்றும் ராம ஜெயம் ஏஜென்சிஸ் ஆதித்யாசிவராம் ராஜா ஆகி யோர் கலந்து கொண்டனர்.