ஜி.கே.என்.எம் மருத்துவமனை புற்றுநோயியல் துறைக்கான துல்லியமான கதிர்வீச்சு சிகிச்சை திட்ட மிடலுக்கான அதி நவீன சிடி சிமுலேட்டர் மற்றும் குழந்தை மருத்துவத் துறைக்கான புதிய பச்சிளம் குழந்தை ஆம்புலன்ஸ் சேவையைத் துவக்கியது.
கோடக் மஹிந்திரா வங்கியின் உள் தணிக்கை தலைவர் அனந்த ராமன் மற்றும் ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர். ரகுபதி வேலுசாமி ஆகியோர் இணைந்து இந்த வசதிகளைத் திறந்து வைத்தனர்.
சிடி சிமுலேட்டர் கட்டிகளின் விரிவான 3டி படங்களை வழங்குகிறது. இது துல்லியமான கதிர் வீச்சு சிகிச்சை திட்ட மிடலுக்கு உதவுகிறது மற் றும் ஆரோக்கியமான திசுக்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கிறது.
சிடி சிமுலேட்டருக்கு கோடக் மஹிந்திரா வங்கி ஆதரவளித்தது.
பச்சிளம் குழந்தை ஆம்புலன்ஸ் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு முக் கியமான போக்குவரத்து வசதியை வழங்கும். இந்த ஆம்புலன்ஸில் இன்குபேட்டர் மற்றும் வென்டிலேட்டர் வசதிகள் உள்ளன. இதற்கு கோடக் மஹிந்திரா கேபிடல் கம் பெனி லிமிடெட் ஆதர வளித்தது.
மருத்துவமனையின் சேவைகளில் இந்த புதிய வசதிகளின் முக்கியத்து வத்தை டாக்டர். வேலுசாமி வலியுறுத்தினார். அத்தி யாவசிய சுகாதாரப் பாதுகாப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில் கோடக் மஹிந்திரா வங்கியின் அர்ப்பணிப்பை ராமன் எடுத்துரைத்தார்.