மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக சட்டத்துறை சார்பில் மூன்றாண்டுகளுக்குட் பட்ட வழக்கறிஞர்களுக்கான 4வது மண்டல பேச்சு போட்டி சட்டத்துறை இணைச் செயலா ளர் அருள்மொழி தலைமையில் மதுரை குறிஞ்சி மகாலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சட்டத்துறை இணை செயலாளர் கே.எஸ். இரவிச்சந்திரன்; துணை செயலாளர் பச்சையப்பன்; தலைமை கழக வழக்கறிஞர் சரவணன், மதுரை வடக்கு மாவட்ட அமைப்பாளர் கலாநிதி, மாநகர் மாவட்ட அமைப்பாளர் தேவசேநன் தெற்கு மாவட்ட அமைப்பாளர் சிவநேசன் மற்றும் மாவட்ட வழக்கறிஞர் அணி நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
இப்போட்டிக்கு நடுவராக வழக்கறிஞர் நன்மாறன் கலந்துகொண்டார்.
இதில் வெற்றிபெற்ற வழக்கறிஞர்களுக்கு பதக்கம், பரிசுத் தொகை, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.