கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலம், சரவணம்பட்டி, போஸ் கார்டன் பகுதியில் புதிதாக தார் சாலை அமையவுள்ள இடத்தினை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், நேரில் சென்று, ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
உடன், வடக்கு மண்டலத்தலைவர் கதிர்வேல், உதவி ஆணையர் முத்துசாமி, உதவி செயற்பொறியாளர் முத்துக்குமார், உதவி பொறியாளர் சக்திவேல் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.