fbpx
Homeபிற செய்திகள்திட்டக்குடி பகுதியில் வளர்ச்சித் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சிபி...

திட்டக்குடி பகுதியில் வளர்ச்சித் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவு

வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்து, அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.

திட்டக்குடி மற்றும் வேப்பூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் நெடுஞ்சாலைத் துறை,பால் வளத் துறை, ஊரகவளர்ச்சித் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, நீர்வளத்துறை ஆகிய துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


அப்போது அவர் கூறி யதாவது: பெருகிவரும் வாகன போக்குவரத்தினால் ஏற்படும் சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டும், தமிழக அரசால் கிராமப்புற சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்துவது,உள்ளிட்ட பல்வேறு பணிகள் மூலம் விபத்தை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


அதன்படி விருத்தாசலம் புறவழிச்சாலையை இருவழி சாலையில் இருந்து நான்கு வழிச்சாலையாக மேம்படுத்துவது, கூடுதல் உயர்மட்ட பாலம் அமைப்பது உள்ளிட்ட பலபணிகள் நடைபெறுவது குறித்தும், திட்டக்குடி தாலுகா உச்சிமேடு இணைப்பு சாலை அருகே சாலை இருபுறமும் ரூ.1.42 கோடியில் தடுப்பு சுவர் அமைக்கும் பணியும் பணிகளை ஆய்வு செய்து, பணிகளை தரமாக மேற்கொள்ளவும், குறிப் பிட்ட காலக்கெடுவிற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதைதொடர்ந்து திட்டக்குடி மற்றும் வேப்பூர் அரசு மருத்துவமனையில் பல்வேறு பிரிவுகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து மருத்துவரிடம் கேட்டறியப்பட்டது.


பின்னர் வேப்பூர் மற்றும் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவமனை கட்டுமான பணிகளை ஆய்வு செய்து, விரைந்து முடிக்க ஒப்பந்த தாரருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் திட்டக்குடி அருகே கீழச்செருவாய் வெலிங்டன் நீர்த்தேக்க கரையை பலப்படுத்துவது, பிரதான வாய்க்கால்கள் புனரமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.


மேலும் வேப்பூர் மற்றும் திட்டக்குடி தாலுகாவில் ரூ.15 கோடியில் மலையனூர் பகுதி முதல் செவ்வேரி வரை கழுதூர் ஓடையில் வெள்ளநீர் வடிகால் வாய்க் கால் அமைக்கும் பணிகள் மற்றும் திட்டக்குடி அடுத்த செம்பேரி மற்றும் சவுந்திரசோழபுரம் பகுதியில் வெள்ளாற்றில் வெள்ளத் தடுப்பு பணிகள் நடைபெ றுவதையும் ஆய்வு செய்யப்பட்டது. இவ்வாறு மாவட் ஆட்சியர் தெரிவித்தார்.


ஆய்வின்போது, நெடுஞ்சாலை துறை கோட்டட்ட பொறியாளர் அய்யாதுரை, இணை இயக்குனர் (மருத்துவ நலப் பணிகள்) குமார். பொதுமேலாளர் ஆவின் அருணகிரிநாதன், செயற்பொறியாளர் நீர் வளத்துறை பாலமுருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img