fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்ட விவசாயிகளுக்காக நடமாடும் மண் பரிசோதனை ஆய்வக வாகனத்தை துவக்கிவைத்த ஆட்சியர்

கோவை மாவட்ட விவசாயிகளுக்காக நடமாடும் மண் பரிசோதனை ஆய்வக வாகனத்தை துவக்கிவைத்த ஆட்சியர்

தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு நடமாடும் மண் பரிசோதனை ஆய்வக வாகனத்தை தமிழ்நாடு அரசு அறிவித்தது.
அதன்படி ரூ.75 லட் சம் மதிப்பீட்டிலான நடமாடும் மண் பரிசோதனை ஆய்வக வாக னம் கோவை மாவட்டத்தில் செயல்பாட் டிற்கு வந்தது.
இதனை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் வாகனத்தில் உள்ள பரிசோதனை கருவிகள் குறித்து வேளாண்துறை அதிகாரிகளி டம் கேட்டறிந்தார்.
மேலும் இந்த வாகனம் முன்கூட் டியே எந்தெந்த கிராமங்களுக்கு செல்கிறது, என்ற தகவல்களை அந் தந்த கிராம விவசாயிகளுக்கு தகவல் அளிக்கப்படும். அதேபோல் மண் பரிசோதனைக்கான கட்டண மாக ரூ.30 வசூலிக்கப்படும். பரிசோதனை முடிவுகள் சான்றிதழ் அட்டைகளாக மாலைக்குள் விவசாயிகளுக்கு வழங்கப்படும். அதேபோல் வாரம் மூன்று மண் பரிசோத னை முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக வேளாண்துறை அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img