fbpx
Homeபிற செய்திகள்ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 30 சதவீத வாக்காளர்களை உறுப்பினராக சேர்க்க வேண்டும் கோவை மாநகர் மாவட்ட திமுக...

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 30 சதவீத வாக்காளர்களை உறுப்பினராக சேர்க்க வேண்டும் கோவை மாநகர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

கோவை மாநகர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நேற்று (9ம் தேதி) காலை வடகோவை, மாவட்ட அலுவலகத்தில், மாநகர் மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கீழ்க்காணும் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை குறித்து கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க மண்டலப் பொறுப்பாளர், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வழிகாட்டுதலில், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 30 விழுக்காடு வாக்காளர்களை நாம் உறுப்பினர்களாக இணைக்க வேண்டும். அதாவது ஒரு வாக்குச்சாவடியில் 1000 வாக்காளர்கள் இருந்தால், அவர்களில் 300 பேர் கழகத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். நமக்கு வாக்களிக்கத் தயாராக இருப்பவர்கள்தான் நம்மிடம் உறுப்பினர்களாக இணைவார்கள். 30% வாக்காளர்களை உறுப்பினர்களாக இணைத்து இப்பொழுதே உறுதி செய்வதுதான் நம் இலக்கு. எனவே, இப்பணியை சுறுசுறுப்புடன், அக்கறையுடன் செய்ய வேண்டும்.

2 கோடி உறுப்பினர்களை நமக்கான வாக்காளர்களாக ஜூலைக்குள் உறுதி செய்துவிட்டால், 2026-ல் நம்ம வெற்றியை யாராலும் தடுக்கவே முடியாது. மாநகர் மாவட்ட நிர்வாகிகள், தலைமைக் கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி செயலாளர்கள், மாவட்ட அணி அமைப்பாளர்கள் பங்கேற்று, திரும்பவும் பெரும் பலத்துடன் கழக ஆட்சி அமைய, அயராது செயல்படுவோம் என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், வருகின்ற 11.06.2025 (நாளை) காலை 10 மணியளவில் சென்னையிலிருந்து கோவை விமான நிலையத்திற்கு வருகை தர உள்ளார். அவருக்கு மண்டலப் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில், ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

இவ்வரவேற்பு நிகழ்வில், காலை 9.30 மணியளவில், கோவை விமான நிலையத்தில், கோவை மாநகர் மாவட்டக்கழக நிர்வாகிகள், நாடாளுமன்ற உறுப்பினர், மேயர் ,தலைமைக் கழக நிர்வாகிகள் ,தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மண்டலத்தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், பகுதிக்கழகச் செயலாளர்கள், வட்டக்கழகச் செயலாளர்கள், அனைத்து உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் தலைவர்கள், அமைப்பாளர்கள், துணைத் தலைவர்கள், துணை அமைப்பாளர்கள், பகுதிக்கழக, வட்டக் கழக நிர்வாகிகள், அனைத்து கழக செயல்வீரர்கள், அனைத்து கழகத் தொண்டர்கள், பாக முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள், அனைவரும் தவறாமல் பங்கேற்று, மாநகர் மாவட்ட திமுக சார்பில் மாபெரும் பிரம்மாண்டமான முறையில் வரவேற்பு அளிப்பது என இக்கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப் படுகிறது.

இக்கூட்டத்தில் கழக சொத்துப் பாதுகாப்பு குழு துணைத் தலைவர் பொங்கலூர் நா.பழனிச்சாமி, மாநகர் மாவட்ட திமுக துணைச் செயலாளர்கள் கோட்டை அப்பாஸ், தளபதி இளங்கோ, கல்பனா செந்தில், பொருளாளர் எஸ்.எம்.பி.முருகன், தலைமைக் கழக நிர்வாகிகள், தீர்மானக்குழு இணைச் செயலாளர் பி.நாச்சிமுத்து, சட்டத்துறை இணைச்செயலாளர் வழக்கறிஞர் பி.ஆர்.அருள்மொழி, தீர்மானக்குழு உறுப்பினர் மு.இரா.செல்வராஜ், தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் அ.தமிழ்மறை, மாணவர் அணி துணை செயலாளர் வி.ஜி.கோகுல்,கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மீனா ஜெயக்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வே.பாலசுப்பி ரமணியம், ஆனந்த குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் வெ.ந.உதயகுமார், முமாச.முருகன், இரா.மணிகண்டன், சங்கனூர் ஆனந்தகுமார், ச.குப்புசாமி, பகுதிக் கழகச் செயலாளர்கள் மு.சிவா, ஷேக் அப்துல்லா, துரை செந்தமிழ்ச் செல்வன், மா.நாகராஜ், இரா.சேரலாதன், ஆர்.எம்.சேதுராமன், மார்கெட் எம்.மனோகரன், வி.ஐ.பதுருதீன், வ.ம.சண்முகசுந்தரம், கோவை லோகு, அஞ்சுகம் பழனியப்பன், எ.எம்.கிருஷ்ணராஜ், கே.எம்.ரவி, பரணி கே.பாக்கியராஜ், மாவட்ட அணி அமைப்பாளர்கள் இளைஞர் அணி இரா.தனபால், தகவல் தொழில்நுட்ப அணி சுரேஷ்குமார், வழக்கறிஞர் அணி எஸ்.அன்புச் செழியன், பொறியாளர் அணி நா.பாபு, சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவு அணி இலா.தேவசீலன், ஆதிதிராவிடர் நலக்குழு அணி பி.சிவராஜ், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி ஏ.எஸ்.ஜெயக்குமார், கலை, இலக்கிய பகுத்தறிவு அணி அ.அபு (எ) அபுதாஹீர், அயலக அணி தி.கண்ணன், நெசவாளர் அணி மணி, விளையாட்டு மேம்பாட்டு அணி எம்.எம்.சஞ்சய் குமார், தொண்டர் அணி கராத்தே அர்ஜூனன், சுற்றுச்சூழல் அணி ஸ்ரீ சத்யா கோவை தங்கம், மகளிர் அணி அன்னம்மாள், மகளிர் தொண்டர் அணி சி.ஸி.கனிமொழி, இளைஞரணி துணை அமைப்பாளர்கள் லாரா பிரேம் தேவ், கோவை அருண், க.மணிகண்டன், இப்னு மசூது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img