சிதம்பரம் கீழமூங்கிலடி ஸ்ரீ ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேராசிரியர்களுக்கான மேம்பாட்டு திட்ட சிறப்பு பயிற்சி 4 நாட்கள் நடைபெற்றது. தொடர்ந்து இதன் நிறைவு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது.
இதற்கு கல்லூரி செயலாளர் டி.வி.கே.பாபு தலைமை தாங்கினார். முதல்வர் டாக்டர் மாலதி வரவேற்றார். கல்லூரி கல்வி நிர்வாகி டாக்டர் அசோக்குமார், கல்லூரி உள்தர உறுதிபாட்டு பிரிவு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் திலகவதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் விண்வெளி பொறியியல் துறையின் தேர்வு தர உதவிப் பேராசிரியர் கவியரசு கலந்து கொண்டு கல்வி நிறுவனங்களில் நிறுவன தலைமைத்துவம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து, பயிற்சி பெற்ற பேராசிரியர்களுக்கு கல்லூரி செயலாளர் டி.வி.கே.பாபு சான்றிதழ்களை வழங்கினார். முடிவில் உதவி பேராசிரியர் சண்முகப்பிரியா நன்றி கூறினார்.