சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரி தமிழ்நாடு பழங்குடியினர் நலத்துறை மற்றும் வாசுகி அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து, ஜவுளிக் கல்வியின் நோக்கம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச் சியை நடத்தியது.
குறிப்பாக ஜவுளித் துறையில் கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளை முன்னிலைப் படுத்துவதன் மூலம் பழங்குடி
மாணவர்களை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்விற்கு கல்லூரியின் இயக்குனர் டாக்டர் பி. அல்லி ராணி தலைமை தாங்கி, நிறுவனத்தின் உள்ளடக்கிய கல்வி மற்றும் திறன் மேம்பாடு என்ற தொலைநோக்குப் பார் வையை எடுத்துரைத்தார்.
தலைமை விருந்தினராக, தமிழ்நாடு பழங்குடியினர் நலத்துறையின் இயக்குநர் எஸ். அண்ணாதுரை, சமூக மாற்றத்திற்கான ஒரு கருவி யாக, குறிப்பாக பழங்குடி சமூகங்களுக்கு ஜவுளிக் கல்வி யின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார்.
தொடர்ந்து, வாசுகி அறக் கட்டளையின் நிறுவனர் திருமதி வாசுகி வினோதினி கல்வி இடைவெளிகளைக் குறைப்பதிலும், பழங்குடி இளை ஞர்களுக்கு அர்த்தமுள்ள தொழில்களைத் தொடர அதிகாரம் அளிப்பதிலும் ஆலோசனை வழங்கினார்.
தொடர்ந்து ஜவுளி மற்றும் பொது அறிவு குறித்த வினாடி வினா நிகழ்ச்சி, பேஷன் ஷோ ஆகியவை நடைபெற்றது.