fbpx
Homeபிற செய்திகள்கவுண்டம்பாளையம் தொகுதியில் தோசை சுட்டு பரப்புரை செய்த அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கவுண்டம்பாளையம் தொகுதியில் தோசை சுட்டு பரப்புரை செய்த அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் இன்று ஆனைகட்டி பகுதியில் வாக்கு சேகரிக்கும்போது, அங்குள்ள ஒரு சாப்பாட்டு கடையில் வெங்காய தோசை சுட்டு, சாப்பிட வந்தவர்களுக்கு வழங்கி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

பொதுமக்களிடம் அவர் பேசும்போது, ஆனைகட்டி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள மலைகிராமங்களுக்கு சாலை வசதி, மின்சார வசதி தொய்வின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்த பரப்புரையின் போது, பொதுமக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img