ரம்ஜான் பண்டிகையை ஏழை, எளிய மக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் கொண்டாடும் வகையில் எம்.ஏ.காதர் அறக்கட்டளை சார்பாக செல்வபுரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு அரிசி, நெய், மளிகை, காய்கறிகள் அடங்கிய பிரியாணி தொகுப்பு வழங்கப்பட்டது.
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ஒரு மாதம் நோன்பு இருந்து பின்னர்,புத்தாடைகள் அணிந்து,பிரியாணி சமைத்து ஏழை,பணக்காரர்கள் வித்தியாசமின்றி கொண்டாடி மகிழ்வது வழக்கம்.
இந்நிலையில்,கோவை செல்வபுரம் ஹாஜி எம்.ஏ.காதர் அறக்கட்டளை சார்பாக ஏழை எளிய கணவன் இல்லாத முஸ்லிம் மற்றும் மாற்று மதத்தினருக்கு பிரியாணி சமைப்பதற்கான அரிசி, நெய், பூண்டு, இஞ்சி, வெங்காயம், சமையல் எண்ணெய் ஆகியவை அடங்கிய பிரியாணி தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட் பகுதியில் நடைபெற்றது.
பஷிர் தலைமையில் நடைபெற்ற இதில், செல்வபுரம் ஷாபிய்யா சுன்னத் வல் ஜமாத்தின் முன்னாள் நிர்வாகிகள் மற்றும் எம் ஏ காதர் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர்கள் ஆட்டோ காதர், அபுதாஹிர், ஜாகிர், செய்யது, இலைக்கடை செல்லா, யூசுப், ராஜகுமார், பட்டறை அமீர், சலிம், கலில் ரஹ்மான், அன்வர்பாஷா ,கேபிள் பாவா, காஜா,ஜாபர்,களரி சலாம், மிராஷ், பஷிர், அப்பாஸ், ஆசிப், நூர்முஹம்மது, மெடிக்கல் சிக்கந்தர்பாஷா உட்பட பலர் கலந்து கொண்டனர்.