தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்றதை தொடர்ந்து, கோவை மேற்கு மாநகர் மாவட்டம், இடையர் பாளையம் பகுதியில் தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இதேபோல கோவை மேற்கு மாநகர் மாவட்டம், கவுண்டம்பாளையம் பகுதி எட்டாவது வட்டக் கழகம் சார்பாக செயலாளர் வெற்றிவேல்
தலைமையில் இடையர்பாளையம் பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இதில் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி பின்பற்றி இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.